ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை வழங்க தயார்!- மோடி
In இந்தியா May 4, 2019 5:35 am GMT 0 Comments 2375 by : Yuganthini

ஒடிசாவில் ஃபானி புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான பானி புயல் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதன்போது ஏற்பட்ட கடும் புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மேலும் இந்த அனர்த்தங்களில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஃபானி புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குமென பிரதமர் மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.