அடுத்த அறிவிப்பு வரை ஷங்ரி-லா ஹோட்டல் மூடல்!
In இலங்கை April 22, 2019 8:51 am GMT 0 Comments 1802 by : Jeyachandran Vithushan

கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டல் அடுத்த அறிவிப்பு வரை மூடப்படும் என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகை இடம்பெற்ற நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் ஷங்ரி-லா ஹோட்டலுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததுடன் வெளிநாட்டவர்கள் பலரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.