அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சீருடை!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான, இலங்கை கிரிக்கெட் அணியின் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சீரூடை தற்போது அனைவரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சீருடை பங்களார்களான மாஸ் ஹொல்டிங்ஸ் நிறுவனம் இந்த சீருடையை தயாரித்துள்ளது.
இந்த சீருடைகள் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்டுத்தாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் உதவியோடு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்து இந்த சீருடைகள் தயாரித்திருக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என நம்பப்படுகின்றது. அத்தோடு குறித்த சீருடையின் கடல் ஆமையின் வடிவமும் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.