அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி
In ஆசிரியர் தெரிவு April 19, 2019 10:35 am GMT 0 Comments 2397 by : Dhackshala
அன்னை பூபதியின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடி கண்டறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆரப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசுவாமி கோயிலில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டப் பேரணி வவுனியா மணிக்கூட்டு கோபுரம் வழியாக அஞ்சல் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமற்போன உறவுகளினால் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை வந்தடைந்தது.
இதன்போது காணாமற்போனவர்களின் உறவினர்கள் அன்னை பூபதியின் நினைவேந்தல் பதாதையை தாங்கியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறும் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் காணாமற்போனவர்களின் உறவினர்களால் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காணமற்போனோரின் உறவுகளால் வவுனியாவில் சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 790ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.