அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவர் பிணையில் விடுதலை
In இலங்கை January 6, 2021 9:12 am GMT 0 Comments 1383 by : Jeyachandran Vithushan

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2015 – 2019 க்கு இடையில் லங்கா சதோசவின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இருவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.