News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • ஊடகங்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை: அமில் பெரேரா எச்சரிக்கை
  • டெல்லியில் பன்றி காய்ச்சல் நோயால் 1,965 பேர் பாதிப்பு
  • சுகாதார அமைச்சு நோயாளர்களை உருவாக்குகின்ற அமைச்சாக இருக்க கூடாது: சமந்த ஆனந்த
  • கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!
  1. முகப்பு
  2. உலகம்
  3. அமெரிக்காவின் பரிந்துரைக்கமைய சிரியாவில் பாதுகாப்பு வலயம்: துருக்கி அறிவிப்பு

அமெரிக்காவின் பரிந்துரைக்கமைய சிரியாவில் பாதுகாப்பு வலயம்: துருக்கி அறிவிப்பு

In உலகம்     January 16, 2019 7:12 am GMT     0 Comments     1592     by : Risha

அதிகரித்துவரும் பதற்றங்களை குறைக்கும் வகையில் வடக்கு சிரியாவில் பாதுகாப்பு வலயமொன்றை ஸ்தாபிக்க துருக்கி தீர்மானித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரிந்துரைக்கமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்புடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலின் போது சிரிய எல்லைக்கு அருகே 32 கிலோமீற்றர் பாதுகாப்பு வலயமொன்று துருக்கி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட வேண்டும் என ட்ரம்ப் பரிந்துரைத்தாக எர்டோகன் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த உரையாடலின்போது அமெரிக்க ஜனாதிபதியுடன் வரலாற்று ரீதியான புரிந்துணர்வு எட்டப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி எர்டோகன், அது குறித்து விளக்கமளிக்க மறுத்துள்ளார்.

சிரியாவிலிருந்து தமது துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பான அமெரிக்காவின் அறிவிப்பினால் ஏற்பட்ட கடும் முரண்பாடுகளுக்கு மத்தியில் இந்த தொலைபேசி உரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் அராஜகம் செய்து வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் அமெரிக்க படையினர் சிரியாவிற்குள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோல்வியுற செய்து விட்டதாக தெரிவித்து அமெரிக்க படையினரை மீளப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து  சிரியாவிலுள்ள குர்திஷ் படைகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்த உள்ளதாக துருக்கி அறிவித்தது. இந்த விவகாரம், அமெரிக்கா, துருக்கி இடையே மோதல் சூழலை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சவுதியின் தீர்மானத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம்!  

    சவுதி அரேபியாவில் வீடுகளிலுள்ள பெண்களை கண்காணிக்கும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு

  • லூசியானாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்!  

    அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்

  • பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை  

    இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவின் மேடம் துஸ்ஸாத

  • ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்!  

    கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள், சிரியாவிலிருந்து தப்பித்து மேற்கு ஈர

  • இலங்கை வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்  

    இலங்கை ஏனைய நாடுகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா வலியுற


#Tags

  • northern Syria
  • Security Zone
  • Turkey
  • United States
  • அமெரிக்கா
  • துருக்கி
  • பாதுகாப்பு வலயம்
  • வடக்கு சிரியா
    பிந்திய செய்திகள்
  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
    பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
    நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.