அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவிருப்பதாக, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அழுத்தங்களை நீக்குவதற்கும், மன்னிப்பு கோருவதற்கும் அமெரிக்கா முன்வரும் பட்சத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயாரென ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) இவ்வறிவிப்பை விடுத்துள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா தமது சட்டவிரோத செயல்களுக்காக மன்னிப்பு கோரி, அழுத்தங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பேச்சுவார்த்தை சாத்தியம் எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.