அரசியலில் களம் இறங்கும் நயன்தாரா!
In சினிமா May 8, 2019 9:44 am GMT 0 Comments 1521 by : adminsrilanka

நடிகை நயன்தாரா விரைவில் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சினிமா மற்றும் தனி வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரிடம் கலந்து ஆலோசித்த பிறகே, அடுத்தகட்ட முடிவை எடுக்கின்றார் நயன்தாரா.
அரசியலில் இறங்கினால் எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தனது ஜாதகத்தைக் கொடுத்து ஆலோசனை நடத்தியிருக்கின்றார். ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த ஜோதிடர், ”அரசியலில் பிரமாதமான எதிர்காலம் இருக்கின்றது. இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம். அரசியலில் இறங்குவதற்கான கால நேரம் பார்த்து கணித்துச் சொல்கின்றேன். அப்போது தீவிர அரசியலில் இறங்கலாம்” என கூறியுள்ளார்.
நயன்தாரா பற்றிய ராதா ரவியின் சர்ச்சை பேச்சுக்குப் பிறகு, காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஜோதிடரைச் சந்தித்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.