அரசியல் கைதிகளின் விடுதலை – முல்லைத்தீவிலும் கவனயீர்ப்பு போராட்டம்
In இலங்கை January 5, 2021 8:31 am GMT 0 Comments 1397 by : Dhackshala
அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், காணாமல்போனோரின் உறவினர்கள், கிறிஸ்தவ முல்லைத்தீவு பங்குத்தந்தை உள்ளிட்ட சுமார் 70 பேர் வரையில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதிக்குரிய மகஜர் வாசிக்கப்பட்டதுடன், குறித்த மகஜரை ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் உள்ளிட்டோருக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.