அரச பாடசாலைகள் மீள திறக்கும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!

அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைக்காக நேற்று பாடசாலை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் நேற்றும் இன்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.