அர்ஜெண்டீனாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அர்ஜெண்டீனாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டோர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அர்ஜெண்டீனாவில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் அர்ஜெண்டீனாவில் இதுவரை 49ஆயிரத்து 674பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 739பேர் பாதிக்கப்பட்டதோடு 108பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 53ஆயிரத்து 240பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மூவாயிரத்து 561பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் 17இலட்சத்து 98ஆயிரத்து 120பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.