அவுஸ்ரேலிய பிரதமர் மீது முட்டை தாக்குதல்: பெண்ணொருவர் கைது
In அவுஸ்ரேலியா May 7, 2019 4:02 am GMT 0 Comments 2873 by : Risha

அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண்ணொருவரை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.
அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னிட்டு அல்பரியில் (Albury) மகளிர் சங்க கூட்டமொன்றில் பிரதமர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தன் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலானது மிகவும் கோழைத்தனமானது என பிரதமர் விமர்சித்துள்ளார்.
அவுஸ்ரேலிய பொதுத் தேர்தல் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.