News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்: மனுஷ நாணயக்கார
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அபார வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அபார வெற்றி

In கிாிக்கட்     September 24, 2018 4:31 am GMT     0 Comments     1501     by : Anojkiyan

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், சுப்பர்- 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

டுபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் பாகிஸ்தான் அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டமாக சொயிப் மலிக் 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் பும்ரா, சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 238 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 39.3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன்படி இந்திய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்தது.

இதில் இந்திய அணி சார்பில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஷிகர் தவான் 114 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 111 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த வெற்றியின் மூலம், இந்தியா அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தெரிவுசெய்யப்பட்டார்.

இப்போட்டியில் 15ஆவது சதத்தை பூர்த்திசெய்த தவானும், 19ஆவது சதத்தை பூர்த்திசெய்த ரோஹித் சர்மாவும் புதிய பெருமையை பெற்றுள்ளனர்.

தவான் – ரோஹித் ஜோடி சதம் விளாசியமையானது, பாகிஸ்தான் அணிக்கெதிராக, ஒரே போட்டியில் இந்திய அணி சார்பில் இரு வீரர்கள் சதங்கள் பெற்ற மூன்றாவது சந்தர்ப்பமாகவும் இது பதியப்பட்டுள்ளது.

மேலும், ரோஹித் சர்மா குறைந்த இன்னிங்சுகளில் 19 சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், 4ஆவது வீரராகவுள்ளார்.

இதுதவிர ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் ஒருநாள் போட்டிகளில் 7000 ஓட்டங்களையும் கடந்த 9ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பாகிஸ்தான் அணிக்கெதிராக, மிக அதிகமான பந்துகள் மீதம் வைத்து, இந்தியா அணி பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாக இந்த வெற்றி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2006ஆம் ஆண்டு முல்தானில் 105 பந்துகள் மீதம் வைத்து பெற்றுக்கொண்ட வெற்றியே பாகிஸ்தான் அணிக்கெதிராக, மிக அதிகமான பந்துகள் மீதம் வைத்து, இந்திய அணி பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

தற்போது நேற்றைய போட்டியில் 126 பந்துகள் மீதம் வைத்து கடந்த கால சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா அணி போராடி தோற்றது – தொடர் நியூசிலாந்து வசம்!  

    மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 4 ஓட்டங்களால

  • தரமான அணியுடன் சிறப்பான வெற்றி: வெற்றியின் பின் ரோஹித் கருத்து  

    நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தரமான அணியுடன் களமிறங்கி சிறப்பான வெற்றியை பதி

  • இந்தியா அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலிருந்து கப்டில் விலகல்!  

    இந்தியா அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலிருந்து, நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்

  • ஆறுதல் வெற்றிபெறுமா நியூசிலாந்து?: நாளை இந்தியாவுடன் மோதல்!  

    நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை (ஞாயிற்றுக

  • தென்னாபிரிக்காவின் தொடரும் வெற்றி: பாகிஸ்தான் சோகம்  

    பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளத


#Tags

  • ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்
  • இந்தியா அணி
  • பாகிஸ்தான் அணி
  • ரோஹித் சர்மா
  • ஷிகர் தவான்
    பிந்திய செய்திகள்
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
    ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
  • அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!
    அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!
  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
    காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
  • பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
    பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
  • பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
  • மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
    மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
    மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
  • பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
    பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.