ஆணின் சடலம் கண்டெடுப்பு – ஒருவர் கைது
In இலங்கை January 15, 2019 6:39 am GMT 0 Comments 1362 by : Dhackshala

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்மித்துள்ள வீட்டிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கலைச்செல்வன் (வயது 35) என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மனைவியைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.