ஆபத்தான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஆபத்தான போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே சந்தேக நபர் ஹமில்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து ஆபத்தான ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஹமில்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.