இந்தியாவிலிருந்து 6ஆம் திகதி முதல் இங்கிலாந்துக்கு விமான சேவை!

இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் நேற்றைய டுவிட்டர் பதிவில், எதிர்வரும் 8ஆம் திகதி முதல், இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்து தொடங்கும் எனக் கூறியிருந்தார்.
இதில் மாற்றம் செய்யப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு விமானங்கள் இயக்கப்படும் எனக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு எதிர்வரும் 8ஆம் திகதி முதல் விமானங்கள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.