இந்தியாவில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
In இந்தியா January 24, 2021 6:34 am GMT 0 Comments 1312 by : Yuganthini

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,54,533 உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 14,849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 155 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,339 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,03,16,786 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 15,948 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 96.83 சதவீதமாக உள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,84,408 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.