இந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்!

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் சீனத் தரப்பில் 20 வீரர்களும் நான்கு இந்திய வீரர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் இன்று ஈடுபட்டிருந்த போது, சீன வீரர்கள் எல்லையைக் கடக்க முற்பட்டதாக இந்திய இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்திய – சீன இராணுவத் தளபதிகள் மட்டத்திலான ஒன்பதாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.