இந்திய நாடாளுமன்ற தேர்தல் – மேற்கு வங்காளத்தில் அதிகூடிய வாக்குப்பதிவு!
In இந்தியா April 29, 2019 10:06 am GMT 0 Comments 1994 by : Krushnamoorthy Dushanthini

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) 4ஆம் கட்ட தேர்தல் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தற்போதைய நிலைவரப்படி அதிகூடிய வாக்குகள் பதிவாகிய மாநிலமாக மேற்கு வங்காளம் காணப்படுவதுடன், இந்த மாநிலத்தில் 52.37 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் குறைந்த வாக்கு பதியப்பட்ட மாநிலமாக ஜம்மு – காஷ்மீர் மாநிலம் 6.66 வீதம் வாக்குகளை கொண்டு காணப்படுகின்றது.
இதேவேளை பீகாரில் 37.71, மத்திய பிரதேசத்தில் 43.44, மகாராஷ்டிரத்தில் 29.93, ஒடிசாவில் 35.79, ராஜஸ்தானில் 44.62 வீதமும் பதிவாகியுள்ளதுடன், உத்தரபிரதேசத்தில் 34.42, ஜார்கண்டில் 44.90, வீத வாக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.