இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து இரண்டாயிரத்து 110பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 21ஆவது நாடாக விளங்கும் இந்தோனேஷியாவில் இதுவரை 16ஆயிரத்து 2பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 442பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 118பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 63ஆயிரத்து 722பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், இதுவரை நான்கு இலட்சத்து 22ஆயிரத்து 386பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.