இந்த ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசி – பைசர்
In உலகம் January 13, 2021 3:28 am GMT 0 Comments 1424 by : Jeyachandran Vithushan

இந்த ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக 1.3 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளையே வழங்கமுடியும் எனகுறித்த நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த அளவு கொரேனா தடுப்பூசிகளை உருவாக்குவதற்காக ஜேர்மனி – மார்பர்க் நகரில் புதிய தொழிற்சாலை ஒன்றை அடுத்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், புதிதாக தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கான மருந்துக் குப்பியின் மூலம் 6 பேருக்கு தடுப்பூசி வழங்கக் கூடியதாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்மூலம், அதிக அளவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க முடியும் எனவும், பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.