News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • டெல்லியை சென்றடைந்தார் சவுதி இளவரசர்
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • இம்ரான் கான் பேச்சு அர்த்தமற்றது – இந்திய வெளியுறவுத்துறை பதிலடி
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இனவாத ஆட்சியை ஏற்படுத்த வைத்திய அதிகாரிகள் சங்கம் முயற்சி: ஐ.தே.க சாடல்!

இனவாத ஆட்சியை ஏற்படுத்த வைத்திய அதிகாரிகள் சங்கம் முயற்சி: ஐ.தே.க சாடல்!

In இலங்கை     July 31, 2018 10:28 am GMT     0 Comments     2727     by : Benitlas

நாட்டில் இனவாத ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கிலேயே வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது கட்டாயமாகும். எமது அரசாங்கம் மாத்திரம் இதனை செய்யவில்லை. முன்னைய அரசாங்கங்கள் அனைத்தும் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளன. இதன் மூலமாகதான் நாட்டை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்ல முடியும். இலங்கையின் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஒப்பந்தங்கள் செய்தே ஆக வேண்டும்.

இல்லை என்றால் நாம் தனிமைப்பட்டு விடுவோம். இதனால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர். இலங்கையானது பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், சீன உள்ளிட்ட எமது அன்டைய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் பல்வேறு இலாபங்களை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் குறித்த நாடுகளுடன் சீரான நட்புறவை பேணி பாதுகாக்க முடியும்.

சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்ததின் போது எமக்கு இலாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும். அதனை தவிர்க்க முடியாது. பொதுவாக ஒப்பந்தங்களில் இலாபம், நஷ்டம் ஆகியவற்றை கருத்திற்கொள்ள முடியாது. மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக டுபாய் இருப்பதனை போன்று ஆசியாவின் பொருளாதார கேந்திர நிலையமாக சிங்கப்பூர் விளங்குகின்றது. ஆகவே அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்வது கட்டாயமாகும்.

இந்த நிலையில் தற்போது சிங்கப்பூருடன் நாம் செய்த ஒப்பந்தை வைத்துக்கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பதற்கு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தயாராகி வருகின்றனர். நாட்டின் இனவாத ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கிலேயே வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், கோத்தாபய ராஜபக்ஷவையும் ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு பொதுமக்களின் கழுத்தை நசுக்க பார்கின்றனர்.

பொது மக்களை பணய கைதிகளாக வைத்து போராட்டம் செய்வதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இந்த ஒப்பந்ததை வைத்து கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்கின்றனர். காலி முகத்திடல், இராணுவ முகாம், துறைமுகர் நகர் திட்டத்திற்காக கடற்பரப்பு போன்றவை விற்கப்படும் போது அப்போதைய ஆட்சியில் அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன போன்றோருக்கு ஞானம் இருக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிக்கு வந்தவுடன் தான் பந்துல குணவர்தன உள்ளிட்ட கூட்டு எதிரணிக்கு ஞானம் பிறந்துள்ளது.

முன்னைய ஆட்சியின் போது நாட்டின் பல இடங்களை நிரந்தரமாக விற்றனர். ஆனால் நாம் அதனை குத்தகைக்கு மாற்றினோம். எனினும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நாட்டின் வளம் விற்கப்படுவதற்கு எதிராக பாதெனிய தலைமையிலான வைத்திய சங்கத்தினர் அப்போது போராடவில்லை.

சாதாரண வைத்தியர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 67 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கின்றது. விசேட வைத்திய நிபுணருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கின்றது. மேலதிக கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. அதற்கு அப்பால் ஐந்து வருடங்களுக்கு வரி தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்படுகின்றது. ஆகவே இவை அனைத்தும் பொது மக்களின் பணமாகும்.

பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெற்று பொது மக்களின் கழுத்தில் கத்தி வைக்க பார்கின்றனர். அனைத்து வைத்தியர்களையும் குறை கூற முடியாது. பாதெனிய தலைமையிலான மாபியாவே இவ்வாறு செயற்படுகின்றது. ஆகவே இவ்வாறான போராட்டங்களுக்கு மக்களே பாடம் புகட்ட வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • டெல்லியை சென்றடைந்தார் சவுதி இளவரசர்  

    இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் அரசமுறை விஜயமாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டெல்லியை சென்றடைந்தார

  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்  

    நடைபெறவுள்ள தெற்காசிய, ஆசிய மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களில் பங்குபற்றவுள்ள

  • 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம்  

    2032 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆ

  • பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் – ஆர்ஜன்டீன ஜனாதிபதி  

    பயங்கரவாதத்தை ஒழிக்க ஆர்ஜன்டீனா எப்போதும் இந்தியாவுடன் துணை நிற்கும் என ஆர்ஜன்டீன ஜனாதிபதி மவுரிசியோ

  • பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்  

    பாகிஸ்தானுடன் இனிமேலும், எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோட


#Tags

  • china
  • contract
  • INDIA
  • initiative
  • Malaysia
  • Medical Officers Association
  • Pakistan
  • Racist rule
  • Singapore
  • United National Party
  • இந்தியா
  • இனவாத ஆட்சி
  • ஐக்கிய தேசியக் கட்சி
  • ஒப்பந்தம்
  • சிங்கப்பூர்
  • சீனா
  • பாகிஸ்தான்
  • மலேசியா
  • முயற்சி
  • வைத்திய அதிகாரிகள் சங்கம்
    பிந்திய செய்திகள்
  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
    பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
    இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
    ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
    ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
  • பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
    பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
  • உலக புகழ்பெற்ற ஜேர்மனிய ஆடை வடிவமைப்பாளர் உயிரிழப்பு
    உலக புகழ்பெற்ற ஜேர்மனிய ஆடை வடிவமைப்பாளர் உயிரிழப்பு
  • மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
    மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
  • 2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
    2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
  • இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
    இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
  • ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
    ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.