இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று(புதன்கிழமை) கடும் மழை பெய்துள்ள நிலையிலேயே, குறித்த வான்கதவுகள் திறக்கப்பட்டதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தாழ்நிலப்பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பன்னங்கண்டி, முரசுமோட்டை, பரந்தன், ஊரியான், கண்டாவளை மற்றும் உமையாள்பரம் உள்ளிட்ட பகுதி மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.