News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. இரண்டாவது நாளாகவும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

இரண்டாவது நாளாகவும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

In இந்தியா     January 23, 2019 7:23 am GMT     0 Comments     1250     by : Yuganthini

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.

சம்பளம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜாக்டோ- ஜியோ எனும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 150 சங்கங்களைச் சேர்ந்த அரச ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரச ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும், 21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இதுவரையில் தமிழக அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காதமையால் அங்கு தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

இதனால் அரச துறையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பரீட்சை காலம் ஆரம்பிக்கவுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசு அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இதேவேளை, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்துமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!  

    புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முந்தல் நகரி

  • பல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை!  

    இந்தியா – பல்கேரியா நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமை

  • லண்டன் தூதரகம் முன் இந்தியர்கள் போராட்டம்!  

    பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக, ஆயிரக்கணக்கான இந்தி

  • புல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்!  

    புல்வாமா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாடலாசிரியர் வைரமுத்து பயங்கரவ

  • அரசின் செயற்பாடுகளை கிரண்பேடி முடக்குகிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு  

    மாநில அரசின் செயற்பாடுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முடக்குகிறாரென புதுச்சேரி முதலமைச்சர


#Tags

  • INDIA
  • protest
  • teachers
  • ஆசிரியர்கள்
  • இந்தியா
  • போராட்டம்
    பிந்திய செய்திகள்
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
    புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
    பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
    காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
    ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  • முதன்மைச் செய்திகள் (16.02.2019)
    முதன்மைச் செய்திகள் (16.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (15.02.2019)
    முதன்மைச் செய்திகள் (15.02.2019)
  • மதியச் செய்திகள் (16.02.2019)
    மதியச் செய்திகள் (16.02.2019)
  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
    சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
  • காலைச் செய்திகள் (16.02.2019)
    காலைச் செய்திகள் (16.02.2019)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.