UPDATE நீர்கொழும்பு பதற்றத்தை அடுத்து ஊரடங்கு அமுல்!
In இலங்கை May 5, 2019 2:49 pm GMT 0 Comments 8286 by : Jeyachandran Vithushan
இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டுள்ளது.
இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நீர்கொழும்பில் இரு குழுவினருக்கிடையில் முறுகல்!
நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் சற்று முன்னர் இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதன்போது சில முச்சக்கர வண்டியில் எரியூட்டபட்டுள்ளதாகவும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த விசேட அதிரடி படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.