இரு பிரதேசங்களில் இன்று தீப்பரவல்

கம்பஹா மற்றும் வத்தளை ஆகிய இரு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், கம்பஹா – ரத்துபஸ்வல பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள நிலப்பரப்பில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.
அந்த தீ தற்போது இறப்பர் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியைநோக்கி பரவி வருவதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வத்தளை -வெ டிகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள கைத்தொழிற்சாலைக்கு அருகிலும் இன்று மதியம் தீபரவல் ஏற்பட்டது.
தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.