இரு வாரங்களில் 2 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் – பிரித்தானியா
In இங்கிலாந்து January 3, 2021 3:55 am GMT 0 Comments 1644 by : Jeyachandran Vithushan

பிரித்தானியாவில் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் சுமார் 2 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அரசாங்கம் கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.
இதேவேளை ஜனவரி மாத இறுதிக்குள் 2 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.