இலங்கைக்குள் வலம் வருகின்றனர் துருக்கியில் பயிற்சி பெற்ற 50 பயங்கரவாதிகள்?
In இலங்கை May 4, 2019 8:04 am GMT 0 Comments 5060 by : Dhackshala

துருக்கியில் ஆயுதப் பயிற்சி பெற்ற FETOவின் 50 உறுப்பினர்கள் 2015ஆம் ஆண்டில் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு இது தொடர்பில் துருக்கி தூதரகம் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தனர் எனவும் தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 16 பேர் தொடர்பில் பொலிஸ் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கியில் பயிற்சி பெற்றுள்ளனர் என்ற விடயம் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான தற்கொலைதாரி சஹரான் ஹாசீமைத் தாக்குதலுக்குத் தூண்டிய மொஹமட் இமாம் பாகிர் என்ற இமாம் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர் சிரியாவிற்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இருந்த ஒருவர் எனக் கண்டறியப்பட்டுள்ளாதாகவும் அந்த செய்தியில் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.