News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகளில் மேலும் விரிசல்: அமெரிக்க ஜனாதிபதி
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல தேரர் விளக்கம்
  • பிரதமர் மலையகத்திற்கு விஜயம்
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 20இல் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது!

இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 20இல் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது!

In ஆசிரியர் தெரிவு     January 13, 2019 7:10 am GMT     0 Comments     1376     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

 ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

பேரவையின் நிகழ்ச்சி நிரல் வரைவு கடந்தவாரம் தயாரிக்கப்பட்ட போது, மார்ச் 20 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்செலெட் அல்லது பிரதி ஆணையாளர் பேரவையில் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பகிரங்கமாக வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை மார்ச் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் நடத்தப்படும் என்றும் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதியை மெதுவாகவே நிறைவேற்றும் நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரும் முயற்சிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • யாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!  

    வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப

  • ஐ.நா. தீர்மானத்தை செயற்படுத்த மீண்டும் கால அவகாசத்திற்கு இலங்கை திட்டம்!  

    ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில

  • இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஏற்பாடு!  

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், இலங்கை தொடர்பான எதிர்பார்ப்புமிக்க அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்

  • தமிழர்களுக்கு நீதி வழங்க ஐ.நா. தவறிவிட்டது: அனந்தி குற்றச்சாட்டு  

    தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக, வடக்கு மாகாணசபை

  • பிரித்தானியா தலைமையில் ஜெனீவாவில் பிரேரணை!- இலங்கைக்கு நெருக்கடி  

    ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த கோரும் வகையில், ஜெனீ


#Tags

  • Geneva
  • Human Rights Council
    பிந்திய செய்திகள்
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
    டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
    மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.