News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!
  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே
  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது
  1. முகப்பு
  2. இலங்கை
  3. இலங்கை குறித்த புரிதல் மோடி அரசுக்கு இல்லை! – கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை குறித்த புரிதல் மோடி அரசுக்கு இல்லை! – கோட்டாபய ராஜபக்ஷ

In இலங்கை     March 25, 2018 6:11 am GMT     0 Comments     1880     by : Varshini

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு இலங்கை குறித்த புரிதல் இல்லையென்றும், இலங்கை மீது வித்தியாசமான பார்வையையே செலுத்தி வருகின்றதென்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே கோட்டா மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான முன்னைய அரசாங்கம் தம்முடன் மிகுந்த புரிதலுடன் செயற்பட்டதாகவும், யுத்தத்தில் புலிகளை தோற்கடிப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்கியதாகவும் கோட்டா குறிப்பிட்டுள்ளார். ஆனால், நிலைமையை சரியாக புரிந்துகொள்ளாமல் தற்போதைய இந்திய அரசாங்கம் அவசர தீர்மானங்களை எடுப்பதாக கோட்டா குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆட்சிக்காலத்தில் இந்திய ராஜதந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் இலங்கைக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிரணியினரை சந்தித்துச் சென்றதாக சுட்டிக்காட்டிய கோட்டா, ஆனால் தற்போது எதிரணியினராக இருக்கும் தம்மை சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் உங்கள் கை இரத்தக்கறை படிந்ததென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கோட்டா, யுத்தத்தை நடத்துவதை விட அதனை முடிவுறுத்தியது மேலானதென்றும் தனது மனசாட்சிக்கு நேர்மையாகவே தான் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் யுத்தத்தை முடிவுறுத்தியதாலேயே இன்றைய ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குச் சென்று அச்சமின்றி கலந்துரையாடுவதாகவும் கோட்டா கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பாகிஸ்தான் உளவுத்துறைக்குப் விரைவில் பதிலடி: ராஜ்நாத் சிங்!  

    காஷ்மீரில் செயற்பட்டுவரும் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகளுக்கு விரைவில் உரிய பத

  • கோட்டா வேட்பாளரானாலும் அச்சம் இல்லை – ஐ.தே.க  

    ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டால் கூட அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப

  • விமான கண்காட்சியில் சர்ச்கைக்குரிய ரஃபேல் போர் விமானங்கள்!  

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பா.ஜ.க மீது காங்கிரஸ் கட்சி தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து

  • சந்திரிக்கா அம்மையார் மோடியுடன் சந்திப்பு!  

    இந்தியாவிற்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந

  • ரஃபேலை பயன்படுத்தி காங்கிரஸ் அரசியல் இலாபம் தேடுகிறது: தமிழிசை  

    ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபம் தேடி வருவதாக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்


#Tags

  • Congress
  • Gotabaya Rajapakse
  • Narendra Modi
  • காங்கிரஸ்
  • கோட்டாபய ராஜபக்ஷ
  • நரேந்திர மோடி
    பிந்திய செய்திகள்
  • கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!
    கபில் தேவ்வின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்!
  • பிரதமருக்கு யாழில் ஏற்பட்ட அவமானம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
    பிரதமருக்கு யாழில் ஏற்பட்ட அவமானம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
    தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
    கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
    அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  • புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
    புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
    நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.