News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • போக்குவரத்தில் சில மாற்றங்கள் – கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்
  • மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
  • சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது – கிரியெல்ல
  • யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் தாயகம் திரும்பினர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் தாயகம் திரும்பினர்

In இந்தியா     July 26, 2018 4:00 am GMT     0 Comments     1850     by : Kemasiya

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் தமது சொந்த ஊருக்குச் சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களும், நேற்று (புதன்கிழமை) மாலை தமிழக மீன்வளத்துறை உதவி பணிப்பாளரின் உதவியுடன்  மதுரையை சென்றடைந்துள்ளனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற குறித்த 16 மீனவர்களும், கடந்த 5ஆம் திகதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 16 பேரும் யாழ். சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தை சென்றடைந்த மீனவர்கள், இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமது படகுகளும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

கச்சதீவு இலங்கையில் கட்டுப்பாட்டிற்குள் சென்றது முதல், இலங்கை அரசாங்கம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் விதிக்கப்பட்டுள்ள எல்லையை தாண்டி, தமிழக மீனவரகள் மீன்படிக்க கூடாது என்னும் நிபந்தனையை விதித்துள்ளது.

ஆயினும் நிபந்தனையை மீறி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பதும், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதுமான சம்பவங்கள் வருடங்கள் பல கடந்தும் தொடர்கின்றன.

இந்நிலையில், இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் குறித்த பிரச்சினைக்கு எந்தவித தீர்வும் எட்டப்படாமல் தொடர்கின்ற நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த 16 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தவாரமும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கனடாவில் இலங்கைத் தமிழர் பொலிஸ் அதிகாரியானார்  

    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில்  றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தி

  • பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்!  

    பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த

  • தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்!  

    தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம்

  • குஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி  

    தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டினால் அபார வெற்றி பெற்றுள்

  • கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு  

    பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரண


#Tags

  • fishermen
  • Rameswaram
  • srilanka
  • இராமேஸ்வரம்
  • இலங்கை
  • மீனவர்கள்
    பிந்திய செய்திகள்
  • போக்குவரத்தில் சில மாற்றங்கள் – கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்
    போக்குவரத்தில் சில மாற்றங்கள் – கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்
  • மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
    மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
  • யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்
    யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்
  • இராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதை தேடிக் கொண்டிருப்பது சிறந்ததல்ல – சுமதிபால
    இராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதை தேடிக் கொண்டிருப்பது சிறந்ததல்ல – சுமதிபால
  • பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு மீண்டும் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு
    பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு மீண்டும் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு
  • புனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்!
    புனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்!
  • டோக்கியோவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள வீரர்களுக்கான பயிற்சியில் இலங்கை வீரர் பங்கேற்பு!
    டோக்கியோவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள வீரர்களுக்கான பயிற்சியில் இலங்கை வீரர் பங்கேற்பு!
  • பேஸ்புக் நிறுவனத்தின் மீது கடுமையான சட்டம் தேவை!
    பேஸ்புக் நிறுவனத்தின் மீது கடுமையான சட்டம் தேவை!
  • யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி!
    யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி!
  • இந்தியா – ஆர்ஜன்டீனாவிற்கு இடையில் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்து (2ஆம் இணைப்பு)
    இந்தியா – ஆர்ஜன்டீனாவிற்கு இடையில் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்து (2ஆம் இணைப்பு)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.