இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
In இலங்கை January 4, 2021 9:45 am GMT 0 Comments 1570 by : Jeyachandran Vithushan

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர், நாளை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை முன்னெடுக்கவள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளிலும் கொவிட் -19 பயண கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.