உக்ரைனில் இருந்து மேலும் 183 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை
In இலங்கை January 7, 2021 8:16 am GMT 0 Comments 1389 by : Dhackshala

உக்ரைன் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளுடனான 5ஆவது விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது
குறித்த விமானத்தில் 183 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக அவர்கள் நாட்டிற்குள் அழைத்துவரப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் டிசம்பர் 28ஆம் திகதி மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.
அவர்களில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.