News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • புல்வாமா தாக்குதல் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி
  • நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!
  • கோட்டாவே அடுத்த ஜனாதிபதியென முடிவு செய்துவிட்டனர் – கம்மன்பில
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. உடன்பாடொன்றுடன் பிரெக்ஸிற் இடம்பெறுவதை உறுதி செய்ய ஜேர்மனி உதவும்

உடன்பாடொன்றுடன் பிரெக்ஸிற் இடம்பெறுவதை உறுதி செய்ய ஜேர்மனி உதவும்

In இங்கிலாந்து     January 17, 2019 3:09 pm GMT     0 Comments     1691     by : shiyani

உடன்படிக்கை மூலம் பிரித்தானியா வெளியேறுவதை உறுதி செய்ய தம்மால் இயன்றதை நிச்சயமாக செய்வோம் என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் இன்று தெரிவித்தார்.

ஆனாலும் பிரெக்ஸிற்றுக்கு இன்னும் குறுகிய காலமே எஞ்சியுள்ள நிலையிலும் பிரித்தானிய பாராளுமன்றத்தில் உடன்பாடும் எதுவும் எட்டப்படாத காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை தாம் விஸ்தரிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய ஹெய்க்கோ மாஸ் கூறியதாவது,

”நாங்கள் அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்கிறோம், உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு தொடர்ந்தும் எம்மை தயார்ப்படுத்தி வருகிறோம், எமது குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சாத்தியமான அளவிற்கு எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் தடுப்பதே எமது குறிக்கோளாகும்”.

“தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பிரித்தானியா தான் கூற வேண்டும், பிரெக்ஸிற்றுக்கான காலக்கெடுவை நீடிக்க விரும்புகிறீர்களா என்பதை அவர்களே தெளிவுபடுத்தவேண்டும்”.

“ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் இடம்பெறவுள்ளதை ஐரோப்பிய ஒன்றியம் நினைவில் கொள்ள வேண்டும்”.

“இந்த நடைமுறையிலிருந்து கிடைத்த ஒரேயொரு நன்மை என்னவென்றால் மீதமுள்ள 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் ஒற்றுமையாக செயற்படுவது தான். பிரெக்ஸிற்றின் பின்னரும் நாங்கள் இப்படியே செயற்பட வேண்டியது அவசியம்”.

மேலும் பிரெக்ஸிற் உடன்படிக்கை தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் புதிய ஆலோசனைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரான்ஸில் குடியேற திட்டமிட்டுள்ள பிரித்தானிய செல்வந்தர்?  

    பிரெக்ஸிற் தொடர்பாக குழப்பமான சூழல் தொடரும் நிலையில் பிரித்தானியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர்

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி  

    ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மூன்று ஆண்டுகளாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத

  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மிகவும் எதிர்மறையானது: நீதியமைச்சர்  

    ஒப்பந்தம் எதுவுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது மிகவும் எதிர்மறையான விளைவுகளை பிரித்

  • ஜெரெமி கோர்பினுடன் கருத்து வேறுபாடு : கட்சி உறுப்பினர்கள் விலகல்!  

    பிரெக்ஸிற் மற்றும் யூத எதிர்ப்புத் தொடர்பான தொழிற்கட்சி தலைவர் ஜெரெமி கோர்பினின் அணுகுமுறைகளுக்கு எத

  • பிரெக்ஸிற் தொடர்பான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரான்ஸ்  

    பிரெக்ஸிற் குறித்த முட்டுக்கட்டைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஐரிஷ் எல்லை தொடர்பாக சலுகைகளை வழங்கு


#Tags

  • Brexit
  • European Union (EU)
  • German Foreign Minister Heiko Maas
  • ஐரோப்பிய ஒன்றியம்
  • ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Frank-Walter Steinmeier
  • பிரெக்ஸிற்
    பிந்திய செய்திகள்
  • மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
    மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை!
  • முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
    முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்
  • பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
    பத்திரிகை கண்ணோட்டம் – 19 -02-2019
  • உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
    உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு!
  • கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
    கொக்குவில் பகுதியில் ஆவா குழுவினர் தாக்குதல்
  • ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
    ஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்
  • நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
    நாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு
  • நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
    நேத்ரா கனடாவிற்காக ஒரு யாத்திரை – விமர்சனம்
  • ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
    ட்ரென்ட் போல்ட்- மொஹமதுல்லா ஆகிய இருவருக்கு ஐ.சி.சி. அபராதம்!
  • சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
    சிம்டாங்காரனை மிஞ்சும் தளபதி 63 திரைப்பட பாடல்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.