உத்தரகாண்ட் பனிச்சரிவு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!
In இந்தியா February 10, 2021 3:18 am GMT 0 Comments 1214 by : Krushnamoorthy Dushanthini

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் கூறுகையில்,“ பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் 175 பேரை காணவில்லை.
அவா்கள் இரண்டு நீா்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபட்டவா்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளைச் சோ்ந்த கிராம மக்கள் ஆவா்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 6 பேரின் சடலங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவா்களின் 32-ஆக உயா்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீா்மின் நிலைய திட்டப் பணிகள் நடைபெற்று வந்த சுரங்கத்தில் சுமாா் 30 போ் சிக்கியுள்ளனா். 12 அடி உயரம் 2.5 கி.மீ. நீளம் கொண்ட அந்தச் சுரங்கத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணியில் இராணுவம், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் சோ்ந்த 300 வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.