உயிர் நீத்த உறவுகளுக்காக மன்னாரில் அஞ்சலி நிகழ்வு
நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் போது உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவ்வகையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பு இன்று (வியாழக்கிழமை) நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நினைவேந்தலில் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி வழிபாட்டுடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சுடர் ஏற்றி பிரார்த்தனையும் இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் அனைத்து சர்வ மதங்களையும் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, விசேட அஞ்சலி நிகழ்வு ஒன்று மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அலுவலகத்திலும் இடம்பெற்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.