News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய பெண்கள் கட்சி அறிவிப்பு
  • ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
  • ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
  • அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
  • வெனிசுவேலாவின் எல்லை நகரங்களில் மோதல்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. உலகமே இந்திய ஆயுதப்படையைப் பாராட்டுகிறது – மோடி

உலகமே இந்திய ஆயுதப்படையைப் பாராட்டுகிறது – மோடி

In இந்தியா     November 7, 2018 1:41 pm GMT     0 Comments     1511     by : Benitlas

ஐ.நா முன்னெடுத்திருந்த அமைதி காக்கும் நடவடிக்கைகளின் போது இந்திய ஆயுதப் படை வழங்கிய பங்களிப்பிற்கு உலக நாடுகள் பலவும் பாராட்டு தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் இன்று(புதன்கிழமை) தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி இமயமலை எல்லைப் பகுதியில் இந்திய திபெத்திய வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் ஹர்சில் என்ற இடத்தை இன்று சென்றடைந்த பிரதமர் எல்லைப் படை வீரர்களோடு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.

இதன்போது எல்லை வீரர்களுக்கு இனிப்புப் பலகாரங்களை வழங்கி வாழ்த்தப் பேசிய விவரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதில், ”எங்கோ தொலைதூர பனிபடர்ந்த உயர்ந்த மலைப்பகுதிகளில் தேசத்தின் வலிமையைப் பறைசாற்றி, தங்கள் கடமையை ஆற்றிவரும் ஜவான்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி, 125 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும் கனவுகளையும் பாதுகாத்து நிற்கிறீர்கள்.

தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. அது நன்மையின் ஒளி பரவச் செய்யும், அச்சத்தை விரட்டிவிடும். அவ்வகையில் எல்லையிலுள்ள வீரர்களும் தங்கள் பொறுப்புணர்ச்சியாலும் அச்சமின்மையாலும் மக்களிடையே பாதுகாப்பு உணர்வையும் அச்சமற்ற தன்மையையும் பரவ உதவுகிறார்கள்.

நான் குஜராத் மாநில முதல்வராக இருந்த காலத்திலிருந்தே தீபாவளிக்கு படைவீரர்களை சந்தித்து வருகிறேன். நான் எப்போது கைலாஸ் மானசரோவர் சென்றாலும் யாத்திரையின் ஒரு பகுதியாக இந்திய திபெத் எல்லைக் காவலர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.

பாதுகாப்புத் துறையில் இந்தியா மிகச் சரியாக முன்னேறி வருகிறது. முன்னாள் படைவீரர்களிடையே இருந்து வரும் வேறுபாடுகளைக் களைந்து ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற நிலையை (ஓஆர்ஓபி) நாம் அமல்படுத்தியுள்ளோம்.

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில், பங்கேற்ற இந்திய ஆயுதப் படைகள் உலகம் முழுவதிலும் புகழையும் பாராட்டுகளையும் பெற்றன என்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தென்கொரியா சென்றடைந்தார் இந்திய பிரதமர் மோடி  

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென்கொரியா சென்றுள்ள

  • சவுதி இளவரசர் – மோடி சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து  

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி இன்று (ப

  • பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்  

    பாகிஸ்தானுடன் இனிமேலும், எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோட

  • புல்வாமா தாக்குதல் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி  

    காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்

  • இந்தியா – ஆர்ஜன்டீனாவிற்கு இடையில் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்து (2ஆம் இணைப்பு)  

    இந்தியா மற்றும் ஆர்ஜன்டீனாவிற்கு இடையில் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு விஜயம


#Tags

  • இந்திய ஆயுதப்படை
  • தீபாவளி
  • தென்னிந்தியா
  • பிரதமர் மோடி
    பிந்திய செய்திகள்
  • ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
    ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
  • ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
    ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
  • அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
    அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
  • LKG திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!
    LKG திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!
  • அல்ஜீரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 41 பேர் கைது!
    அல்ஜீரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 41 பேர் கைது!
  • இந்தியா-பாகிஸ்தான் இடையில் எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா.வுக்கு கடிதம்
    இந்தியா-பாகிஸ்தான் இடையில் எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா.வுக்கு கடிதம்
  • கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114ஆக அதிகரிப்பு!
    கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114ஆக அதிகரிப்பு!
  • பிரிஸ்டொல் நகரில் வெடிப்புச் சம்பவம்: மூவர் படுகாயம்
    பிரிஸ்டொல் நகரில் வெடிப்புச் சம்பவம்: மூவர் படுகாயம்
  • ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
  • பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
    பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.