உள்ளாட்சித் தேர்தலை உடன் நடத்த முடியாது – உச்ச நீதிமன்றில் தமிழக அரசு தெரிவிப்பு

உள்ளாட்சிக்கான தேர்தலை தற்போது நடத்த முடியாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சமீபத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போதே தமிழக அரசு இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று மீண்டும் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தமிழக அரசால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் இன்னமும் தயார் செய்யப்படவில்லை எனவும், இந்திய தேர்தல் ஆணையகத்திடம் இருந்து வாக்காளர் பட்டியல் வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தற்போது உடனடியாக தேர்தலை நடத்த முடியாது என்றும், தி.மு.க.வின் வழக்கில் உள்நோக்கம் உள்ளதென்றும் தமிழக அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.