ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீரவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் பொதுமக்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணம் செய்கின்ற நிலையில் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவது அவசியம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.