எத்தியோப்பாவில் மூன்று வாரங்களாக இடம்பெறும் போரில் 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்
In உலகம் November 25, 2020 11:58 am GMT 0 Comments 1371 by : Jeyachandran Vithushan

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியத்தில் மூன்று வாரங்களாக இடம்பெற்ற மோதலில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் மத்திய அரசின் இராணு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் டைக்ரேயன் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது
இதனை அடுத்து எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது பிராந்திய அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து நவம்பர் 4 முதல் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.
அப்போதிருந்து, டைக்ரேவுக்கான தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் குறைக்கப்பட்டமையினால் அந்த பகுதிக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்ததாகவும் நம்பப்படுவதுடன், இரு தரப்பினரும் பொதுமக்கள் மீது அட்டூழியங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 9 ஆம் திகதி மாய் கத்ராவில் நடந்த கொலைகள் தொடர்பாக மூன்று நாட்களுக்குப் பிறகு மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு சர்வதேச மன்னிப்புச் சபையினால் முதலில் அறிக்கையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.