ஏற்கனவே கணிக்கப்பட்டு விட்ட உலக அழிவு… – 4000 பக்கங்களில் பதிவு
In WEEKLY SPECIAL March 24, 2018 10:34 am GMT 0 Comments 2938 by : Puvanes

தொழில் நுட்ப வளர்ச்சியினால் உலகம் சுருங்கிய நாள் முதல் உலக அழிவு தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த முதலாம் 2ஆம் உலக யுத்த காலத்திலும் கூட உலக அழிவு தொடர்பில் பெரிதாக பிரஸ்தாபிக்கப்படவில்லை காரணம் அப்போதைய காலகட்டத்தில் இப்போது உள்ள செய்தித் தொடர்பாடல்கள் இல்லை.
ஆனால் இப்போதோ சிறியதோர் விபத்து முதல், பாரிய அனர்த்தம் வரை அனைத்தையும் உலக அழிவோடு தொடர்பு படுத்தி பேசுவது நாகரீகமாகப் போய்விட்டது.
இவ்வாறு பூமிக்கிரகத்தின் அழிவு தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், புகழ்பெற்ற விஞ்ஞானியும், அறிவியல் மேதையுமான ஐசாக் நியூட்டன் உலக அழிவு தொடர்பில் கணித்து கூறியுள்ளார்.
உலக அழிவு தொடர்பில், ஒருபக்கம் சதியாலோசனைக் கோட்பாடுகள், மறுபக்கம் விஞ்ஞானிகளின் தகவல்கள் அத்தோடு மதக்கோட்பாட்டாளர்கள் முன்வைக்கும் கருத்துகள் என அண்மைய நாட்களில் பலவிதமான செய்திகள் வெளிவந்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.
அழிவு ஆரம்பமாகின்றது என அமெரிக்க ஆய்வாளரான டேவ் மீடி அண்மையில் தெரிவித்த தகவல்களால் மேற்குலகம் புரியாததோர் அச்சத்தில் உள்ளது.
உலக அழிவு தொடர்பில் ஐசாக் நியூட்டன் 1704 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே கணிப்புகள் மூலம் குறித்து வைத்துள்ளமை ஆச்சரியமே.
விவிலியத்தின் வசனங்கள் மற்றும், தீர்க்கதரிசி தானியேலின் கூற்றுகளை ஆராய்த பின்னரே நியூட்டன் சுமார் 4000 இற்கும் அதிக பக்கங்களில் உலக அழிவினை பதிவு செய்து வைத்துள்ளார்.
அதன்படி 2060 ஆம் ஆண்டு முதல் உலக அழிவு ஆரம்பமாகும் என நியூட்டனின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆச்சரியமான விடயம் யாதெனின் நியூட்டனின் குறித்த குறிப்பு பதிவுகளில் இதுவரை உலகில் நடந்த விடயங்களும் கூட மிகச்சரியாக கணித்து கூறப்பட்டுள்ளதே ஆகும்.
மேலும், கொள்கைகள் அற்ற நாடுகள் காரணமாக இந்த உலகின் அழிவு ஆரம்பமாகும் எனவும், உலக அழிவு தொடர்பில் பலரும் எதிர்வு கூறினாலும் அவையனைத்தும் பொய்த்துபோகும் அதன் பின்னர் அழிவு ஆரம்பமாகும் என நியூட்டனின் குறிப்புகளில் உள்ளது.
இந்த நிலையில், நியூட்டனின் குறிப்புகளை ஆய்வு செய்த ஆய்வாளர் ஒருவர், தற்போது தொடர்ந்தும் உலகில் நடைபெற்று வரும் சம்பவங்கள் நியூட்டனின் கணிப்பை மெய்ப்பிப்பதாகவே உள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை, எத்தனை முறைகள் உலக அழிவுகள் தொடர்பில் கதைகள் வெளிவந்தாலும் மக்கள் மத்தியில், “நாம் வாழும் பூமி என்றுமே அழியாது” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் தொடர்ந்து வருகின்றது.
ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் உலக நடப்புகளை அவதானித்து , தீர்க்க தரிசனங்களை ஆய்வு செய்யாமலேயே உலகம் அழிவை நோக்கியே பயணிக்கின்றது என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளமுடியும்.
எனினும் தீர்க்கதரிசிகளின் கணிப்புகளின் படி திடீரென ஒட்டுமொத்த பூமியும் அழிவடையுமா என்பதே இப்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.