ஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்

ஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிரடியுடன் பெங்களூர் அணி 202 ஓட்டங்களை குவித்துள்ளது.
12ஆவது ஐ.பி.எல். தொடரின் 42ஆவது லீக் போட்டி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
ஆரம்ப வீரர்களாக அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் பார்தீவ் படேல் அதிரடி காட்டினர். இதன்காரணமாக பெங்களூர் அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களை குவித்தது.
நான்காவது ஓவரின் முதல் பந்தில் விராட் கோஹ்லி 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய மொய்ன் அலியுடன் இணைந்து அதிரடி காட்டிய பார்தீவ் படேலும் 6.2 ஆவது ஓவரில் மொத்தமாக 24 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 7 நான்கு ஓட்டம் அடங்களாக 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 3 ஆவது விக்கட்டுக்காக கைகோர்த்தாடிய மொயன் அலி 7.3 ஆவது ஓவரில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அக்சீப் நாத் 8 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூர் அணி 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தது.
அதன் பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த வில்லியர்ஸ் மற்றும் ஸ்டோனிஸ் மைதானத்தில் தொடர்ந்து அதிரடிகாட்ட ஆரம்பிக்க பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 122 ஓட்டங்களை குவித்தது.
17.2 ஆவது ஓவரில் 35 பந்துகளை எதிர்கொண்ட வில்லியர்ஸ் அரைச்சதம் கடந்தார். அத்துடன் 19ஆவது ஓவரை எதிர்கொண்ட வில்லியர்ஸ் அந்த ஓவரின் 3வது, 4வது மற்றும் ஆவது பந்து வீச்சில் அடுத்தடுத்து 3 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.
இறுதி ஓவரிலும் ஸ்டோனிஸ் மற்றும் வில்லியர்ஸ் அதிரடி காட்ட பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை குவித்தது.
ஆடுகளத்தில் வில்லியர்ஸ் 44 பந்துகளை எதிர்கொண்டு 7 ஆறு ஓட்டம், 3 நான்கு ஓட்டம் அடங்களாக 82 ஓட்டத்துடனும், ஸ்டோனிஸ் 34 பந்துகளில் 3 ஆறு ஓட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்களாக 46 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.