ஐ.நாவின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கை கைச்சாத்து!

இலங்கையின் சமூக அபிவிருத்தியை நேரடியாகப் பாதிக்கும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அமைச்சர் திலக் மாரப்பன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.
சமூக முன்னேற்றத்திற்கான நிதியம் மற்றும் சமூக தொழில் முனைவோருக்கான நிதியம் ஆகியன இதன் ஊடாக நிறுவப்படவுள்ளன.
இதன் ஊடாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இலங்கைத் திட்டங்களுக்கான தனியார் பிரிவையும் இணைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.