News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • காங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஐ.நா. பிரதிச் செயலாளர் கூட்டமைப்புடன் சந்திப்பு!

ஐ.நா. பிரதிச் செயலாளர் கூட்டமைப்புடன் சந்திப்பு!

In இலங்கை     March 10, 2018 7:54 am GMT     0 Comments     1497     by : Ravivarman

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில், அண்மையில் இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான அரசியல் நிலவரம் குறித்து உதவி செயலாளரிற்கு இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கம் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் எனவும், இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் நெருங்கிய ஈடுபாட்டினை அரசாங்கத்தோடு கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் காணப்பட்ட தேவையற்ற இழுத்தடிப்புகள் காரணமாக மக்கள் அரசாங்கம் மீதும் அதனது கட்டமைப்புகள் மீதும் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இந்த தீர்மானங்கள் மேலும் இழுத்தடிப்புகளின்றி நிறைவேற்றப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக வழங்கிவரும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் இலங்கை தொடர்பில் ஐ.நா.வின் நெருங்கிய கண்காணிப்பும் தொடர்பாடலும் தொடர்ந்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!  

    கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று (ஞாயிற்கிழமை

  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!  

    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில

  • அரசியல் ரீதியாக மக்கள் ஆதரவளித்தால் கம்பனிகளுடன் பேரம் பேசத் தயார்: திகாம்பரம்!  

    அரசியல் ரீதியாக பலம் தந்த மக்கள் தொழிற்சங்க ரீதியாகவும் பலத்தை வழங்கினால் கம்பனிகளுடன் பேரம் பேசி சம

  • பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி: ஜனாதிபதி  

    பலமான கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என ஜனாதிபதி மைத்திரிப

  • எதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும்: சிவயோகநாதன்  

    எதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்


#Tags

  • Maithripala Siresena
  • opposition leader R.Sampanthan
  • இரா.சம்பந்தன்
  • ஜெப்ரி பெல்ட்மன்
  • மனித உரிமைப் பேரவை
  • மாவை சேனாதிராஜா
    பிந்திய செய்திகள்
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
    பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
  • தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
    தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
  • அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
    அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
  • ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
    ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.