ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா!!
In ஆசிரியர் தெரிவு January 25, 2021 7:26 am GMT 0 Comments 1553 by : Jeyachandran Vithushan

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்தும் பிரித்தானியா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான ஐ.நா. அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், குறித்த அறிக்கையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அணுகுமுறை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.