ஒன்ராறியோவில் 1,800 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – 29 பேர் உயிரிழப்பு
In கனடா November 29, 2020 10:34 am GMT 0 Comments 1918 by : Jeyachandran Vithushan

ஒன்ராறியோவில் 1,800 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகப் பதிவாகியுள்ள நிலையில் மாகாணத்தில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை ஒன்ராறியோவில் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மேலும் 29 இறப்புகள் பதிவகைய நிலையில் ஒன்ராறியோவில் பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை 3,624 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 95 ஆயிரத்து 876 பேர் மீண்டுள்ளனர், 1,510 நோயாளிகள் நேற்று குணமடைந்ததாகவும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.