இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
In ஆசிரியர் தெரிவு February 3, 2021 3:26 am GMT 0 Comments 1417 by : Dhackshala

நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 29 ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 23 ஆயிரத்து 217 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் இதுவரையில், ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 767 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.