ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா!- வவுனியா நகரை மீண்டும் முடக்க நடவடிக்கை
In இலங்கை January 8, 2021 8:36 am GMT 0 Comments 1827 by : Yuganthini

வவுனியா நகர்ப்பகுதியில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா- பட்டானிச்சூரில் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர்ப்பகுதியில் நேற்று முன்தினம் திடீர் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள், அங்கு பணியாற்றுவோர் மற்றும் பட்டானிச்சூர் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறி வர்த்தக நிலையத்தினை திறந்தவர்கள் என 204 பேருக்கு இவ்வாறு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று அவர்களுக்கான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் வவுனியா நகரை மீண்டும் முடக்கி அங்குள்ளவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.