ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் எட்டாயிரதது 12பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 35ஆவது நாடாக விளங்கும் ஒஸ்திரியாவில், இதுவரை நான்கு இலட்சத்து 23ஆயிரத்து 839பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 317பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13ஆயிரத்து 774பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 290பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து 53பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.