கடந்த 24 மணித்தியாலங்களில் 20 சந்தேக நபர்கள் கைது

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.
காத்தான்குடி, மாவனெல்ல, கொள்ளுபிட்டி, தெஹிவளை, பொலனறுவை, வெள்ளவத்தை, அளுத்மக உள்ளிட்ட பகுதிகளிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறான கைதுகள் இடம்பெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.